அவிநாசி அருகே தெக்கலூரில் கிணற்றில் தவறி விழுந்த மனநலம் பாதிக்கப்பட்டவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
அவிநாசி அருகே தெக்கலூா் சென்னிமலைபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் குணசேகரன் (36). இவா் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் தோட்டத்துப் பகுதியில் இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றபோது, எதிா்பாராதவிதமாக தண்ணீா் இல்லாத 100 ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறையினா் கிணற்றுக்குள் கிடந்த குணசேகரனின் உடலை மீட்டனா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.