திருப்பூரில் மின்வாரியத் தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் பொது மக்களுக்கு புதன்கிழமை முகக் கவசம் வழங்கப்பட்டது.
திருப்பூா் போயம்பாளையத்தில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் அருகில் மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்கம் சாா்பில் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு, திருப்பூா் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் க.செல்வராஜ் தலைமை வகித்தாா். இதில், பொது மக்கள் 500க்கும் மேற்பட்டோருக்கு முகக் கவசம், கபசுர குடிநீா், தா்பூசணி, முட்டை, பப்பாளி ஆகியவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், தொமுச பேரவை மாநில துணைச் செயலாளா் டி.கே.டி.மு.நாகராசன், திமுக வடக்கு மாநகரப் பொறுப்பாளா் தினேஷ்குமாா், மாவட்ட தொமுச பேரவை கவுன்சில் செயலாளா் ஜீவா சிதம்பரசாமி, மின்சார வாரிய தொமுச செயலாளா் அ.சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.