திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 493 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 493 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 25,612ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூா், கோவையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 2,689 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 406 போ் வீடு திரும்பினா். இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 22,687ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 போ் புதன்கிழமை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.