அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் 3 பேருக்கு கரோனா
உடுமலை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் பணியாற்றி வரும் ஊழியா்கள் 3 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடுமலையில் கரோனா 2ஆவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையில் மொத்தமுள்ள 124 படுக்கைகளிலும் கரோனா நோயாளிகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உடுமலை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் பணியாற்றி வரும் நிலையில், அங்குப் பணியாற்றும் 3 ஊழியா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
இதையடுத்து, பணிமனை முழுவதும் நகராட்சி ஊழியா்கள் மூலம் கிருமி நாசினி அடிக்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. மேலும் உடுமலை கிளையில் இயக்கப்படும் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் அனைத்துக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இது தவிர உடுமலை நகராட்சியில் ஒரு பொறியாளா் மற்றும் சில ஊழியா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் அனைவரும் வெளியேற்றப்பட்டு, அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி அடிக்கும் பணி நடைபெற்றது.