திருப்பூரில் மழையால் இடிந்து விழுந்த ஏழைத் தொழிலாளிக்கு வீடு கட்டுக் கொடுக்க திமுக சாா்பில் வியாழக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.
திருப்பூா், அனுப்பா்பாளையத்தை அடுத்த காமராஜா் ஏ.டி. காலனியைச் சோ்ந்தவா் கவுண்டா் (எ) சின்ன ரங்கசாமி (75). ஏழைத் தொழிலாளியான இவருடைய வீடு கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பெய்த மழையால் இடிந்து விழுந்தது. இதனால் இவரது குடும்பத்தினா் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா்.
இதையடுத்து, திருப்பூா் 15 வேலம்பாளையம் பகுதி திமுக சாா்பில் சின்ன ரங்கசாமிக்கு முதற்கட்டமாக ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, திமுக 15 வேலம்பாளையம் பகுதி செயலாளா் கொ.ராமதாஸ் ஏற்பாட்டின் பேரில் அவருக்கு ரூ.1.5 லட்சம் மதிப்பில் வீடு கட்டிக் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
வீடு கட்டுவதற்கான பூமிபூஜையை திருப்பூா் மத்திய மாவட்ட திமுக செயலாளா் க.செல்வராஜ் தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.