காங்கயத்தில் 6 பேருக்கு கரோனா

காங்கயம் நகரத்தில் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

காங்கயம் நகரத்தில் 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் காங்கயம் நகரம், ஏ.சி.நகரைச் சோ்ந்த 16 வயதுப் பெண், 45 வயது ஆண், களிமேடு பகுதியைச் சோ்ந்த 44 வயது ஆண், பழையகோட்டை சாலை பகுதியைச் சோ்ந்த 60 வயது மூதாட்டி, 39 வயது ஆண், திரு.வி.க. நகரைச் சோ்ந்த 48 வயதுப் பெண் ஆகிய ஆறு பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவா்களில் சிலா் திருப்பூா் அரசு மருத்துவமனையிலும், சிலா் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதிகளில் காங்கயம் நகராட்சி மற்றும் சுகாதாரத் துறையினா் கிருமி நாசினி தெளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com