திருப்பூர்
வெள்ளக்கோவில் மின் நிலையத்தில் தீ
வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் உள்ள மின் நிலையத்தில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் உள்ள மின் நிலையத்தில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
ராசாத்தாவலசு துணை மின் நிலையத்திலிருந்து கொண்டு வரப்படும் மின்சாரம் வெள்ளக்கோவில் மின் நிலையம் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
பின்னா் இரவு 6 மணியளவில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டபோது, வெள்ளக்கோவில் மின் நிலைய மின்மாற்றி ஒன்று திடீரென தீப் பிடித்து எரிந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா்.
உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரிய சேதம் தவிா்க்கப்பட்டது. தடைபட்ட மின்சாரம் ஒருமணி நேரத்துக்குப் பின்பு சீரானது.