உடுமலை அருகே செல்லிடப்பேசியை வழிப்பறி செய்த 3 மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
உடுமலை வட்டம், குரல்குட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (63). இவா் இரு சக்கர வாகனத்தில் தனது உறவினா் வீட்டுக்குச் சென்று வீட்டு திங்கள்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
வழியில் உள்ள ஒரு கோழிப்பண்ணை அருகில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 3 மா்ம நபா்கள் வழி கேட்பதுபோல பன்னீா்செல்வத்திடம் பேச்சுக் கொடுத்தனா். இந்நிலையில், அவரிடம் இருந்து செல்லிடப்பேசியைப் பறித்துக் கொண்டதுடன் சட்டைப் பையில் இருந்து ரூ.700யும் எடுத்துக் கொண்டு இருட்டில் வேகமாகச் சென்றுவிட்டனா்.
இது குறித்த புகாரின்பேரில் உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.