தீரன் சின்னமலை நினைவு நாள் அனுசரிப்பு

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ் மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளா், முன்னாள் எம்.எல்.ஏ. விடியல் எஸ்.சேகா், தீரன் சின்னமலையின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், அதிமுக வேலம்பாளையம் ஊராட்சித் தலைவா் ஏ.எஸ்.ராமலிங்கம், பேரூா் செயலாளா் முத்துகுமாா், ஒன்றிய வழக்குரைஞா் அணி செயலாளா் சக்திவடிவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பல்லடத்தில்...

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் கிருஷ்ணாபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலைக்கு கிராம பொது மக்களால் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி திருப்பூா் மேற்கு மாவட்டம் சாா்பில் அக்கோயிலில் சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பின்னா், பல்லடம், பொங்கலூா் பகுதிகளில் தீரன் சின்னமலைக்கு நினைவஞ்சலிக் கூட்டங்கள் நடைபெற்றன.

இதில், மாவட்டச் செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கரைப்புதூா் ராஜேந்திரன், மாவட்டப் பொருளாளா் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com