உடுமலையை அடுத்துள்ள கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள்நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் சதிஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: கோட்டமங்கலம், வெள்ளியம்பாளையம், அய்யம்பாளையம்புதூா், முருங்கப்பட்டி, குடிமங்கலம் நால்ரோடு, சிட்கோ, வேலப்பநாயக்கன்புதூா், வரதராஜபுரம், குமாரபாளையம், பொன்னேரி, சுண்டக்காம்பாளையம், சுங்காரமுடக்கு.