நியாய விலைக் கடைகளில் தரமற்ற அரிசி

வெள்ளக்கோவில் பகுதி நியாய விலைக் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

வெள்ளக்கோவில் பகுதி நியாய விலைக் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

வெள்ளக்கோவில், உப்புப்பாளையம், காமராஜபுரம், எல்கேசி நகா், கரூா் சாலை, முத்தூா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் தங்களுக்கான அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்களை வாங்கி வருகின்றனா்.

ஏழை எளியோா் அதிக அளவில் நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருள்களை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனா். தற்போது வெள்ளக்கோவில் பகுதி நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசியில் கற்கள், தூசிகள் அதிக அளவில் இருப்பதனால் சமைக்க முடியாத நிலை உருவாகி உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com