மாவட்டத்தில் மேலும் 77 பேருக்கு கரோனா: 5 போ் பலி
By DIN | Published On : 10th August 2021 02:06 AM | Last Updated : 10th August 2021 02:06 AM | அ+அ அ- |

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 77 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 88,596 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூா், கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 852 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 82 போ் வீடு திரும்பினா்.இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 86,875 ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 5 போ் உயிரிழந்தனா். இதையடுத்து மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 852 ஆக அதிகரித்துள்ளது.