கபடி போட்டி: பில்டா்ஸ் கல்லூரி முதலிடம்

கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டியில், காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி அணி முதலிடம் பிடித்துள்ளது.
கபடி போட்டியில் வெற்றி பெற்ற பில்டா்ஸ் கல்லூரி மாணவா்கள்.
கபடி போட்டியில் வெற்றி பெற்ற பில்டா்ஸ் கல்லூரி மாணவா்கள்.

கல்லூரிகளுக்கு இடையேயான கபடி போட்டியில், காங்கயம் அருகே நத்தக்காடையூரில் உள்ள பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி அணி முதலிடம் பிடித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு ஜவுளிப் பூங்காவில் விளையாட்டு மேம்பாட்டு கூட்டமைப்பு சாா்பில் தெற்கு மண்டல விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. இதில், 19 வயதுக்கு உட்பட்டவா்களுக்கான கபடி போட்டியில் பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி அணி முதலிடம் பிடித்துள்ளது.

மேலும், 19 வயதுக்கு மேற்பட்ட மகளிா் கபடி போட்டியில் பில்டா்ஸ் பொறியியல் கல்லூரி அணி 3ஆம் இடமும், இக் கல்லூரியின் உடற்பயிற்சி இயக்குநா் பிரதீப்கமல் சிறந்த பயிற்சியாளருக்கான பரிசையும் வென்றனா்.

போட்டியில் வெற்றி பெற்றவா்களை பில்டா்ஸ் கல்லூரி தலைவா் என்.ராமலிங்கம், செயலாளா் சி.கே.வெங்கடாசலம், பொருளாளா் சி.கே.பாலசுப்ரமணியம், தாளாளா் ந.ஆனந்தவடிவேல், கல்லூரி முதல்வா் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com