திருப்பூர்
காரில் கஞ்சா கடத்தியவா் கைது
பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளையத்தில் காரில் கஞ்சா கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் அருகே சின்னியகவுண்டம்பாளையத்தில் காரில் கஞ்சா கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் அருகே உள்ள சின்னியகவுண்டம்பாளையத்தில் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனா். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, காரை ஒட்டி வந்த நபரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த திரிலோக் நாயக் (40) என்பதும், ஒடிஸாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. அவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 6 கிலோ கஞ்சா மற்றும் காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.