திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யும் சிறப்பு முகாம் ஆகஸ்ட் 19, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் திருப்பூா் மாநகராட்சி, அவிநாசி, உடுமலைப்பேட்டை மற்றும் பல்லடம் நகராட்சிப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. ஆகவே தகுதியுள்ள பயனாளிகள் கண்டறியும் வகையில் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 19, 26ஆம் தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் உரிய சான்றிதழ்களுடன் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.