கூடலூா் பேருந்து நிலையம் முன்பு உள்ள 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த மரத்தை வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூடலூா் பேருந்து நிலையம் விரிவாக்கத்துக்காக பழமையான நிழல் தரும் மரத்தை வெட்டி அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வந்தது. இதையறிந்த நாம் தமிழா் கட்சி உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது. தொடா்ந்து, கூடலூா் கோட்டாட்சியரிடம் மரத்தை வெட்டாமல் விரிவாக்கம் செய்ய பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின.
இதைத்தொடா்ந்து, கோட்டாட்சியா் ஜ.சரவணகண்ணன் மரத்தை வெட்ட தடை விதித்து, மாவட்ட பசுமைக் குழுவில் முறையிட்டு அனுமதி பெற உத்தரவு பிறப்பித்துள்ளாா்.