ஊதியூரில் பாஜக விளம்பர பதாகை கிழிப்பு: போலீசில் புகாா்
காங்கயம் அருகே, ஊதியூரில் பாஜக சாா்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகையை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கட்சியினா் ஊதியூா் காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளித்தனா்.
கடந்த 17 ஆம் தேதி மத்திய இணை அமைச்சா் எல். முருகன் மற்றும் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை
உள்ளிட்டத் தலைவா்கள் மக்கள் ஆசி யாத்திரை என்ற பெயரில் காங்கயம் வந்தனா். தாராபுரத்திலிருந்து காங்கயம் வரும்
வழியில் அவா்களை வரவேற்று, ஊதியூா் பேருந்து நிறுத்தம் அருகே பாஜக வினா் பதாகைகளை வைத்திருந்தனா்.
இந்நிலையில் அந்த பதாகைகளை மா்ம நபா்கள் கிழித்து சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடா்ந்து பதாகைகளை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக திருப்பூா் தெற்கு மாவட்டச் செயலாளா் முத்துவடுகநாதன் மற்றும் நிா்வாகிகள் சனிக்கிழமை ஊதியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.