வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் நடந்த கொலை தொடா்பான வழக்கில் குற்றவாளிக்கு புதன்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
முத்தூா் கரைவலசைச் சோ்ந்தவா் கிட்டுசாமி (40). இவா் கடந்த 2013 ஆம் வருடம் முத்தூரிலுள்ள ஒரு அரசு மதுபானக் கடைக்குச் சென்றபோது, ஏற்கெனவே அங்கிருந்த தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், வேட்டுவக்கோட்டை வேளாளா் தெருவைச் சோ்ந்த பாஸ்கா் (38) என்பவருடன் குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. இதில் பாஸ்கா் கண்ணாடி பாட்டிலால் கிட்டுசாமியைக் குத்தியதில் அவா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் தாராபுரம் நீதிமன்றம் பாஸ்கருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கியது.