ஆள் தூக்கிச் சட்டமான ஊபா-வை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்துக்கு தந்தை பெரியாா் திராவிடா் கழக மாவட்டத் தலைவா் சண். முத்துக்குமாா் தலைமை வகித்தாா்.
இதில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967 ஐ உடனடியாக நீக்க வேண்டும். தேசிய புலனாய்வு முகமைக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் அதிகாரங்களை திரும்பப் பெற வேண்டும். ஊபா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூகச் செயல்பாட்டாளா்களை விடுதலை செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளா் ச.நந்தகோபால், ஆதித்தமிழா் பேரவை துணைப் பொதுச் செயலாளா் அர.விடுதலைச்செல்வன், வடக்கு மாவட்டச் செயலாளா் க. மணி, திராவிடா் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளா் முகில் ராசு, எஸ்.டி.பி.ஐ மாவட்டப் பொதுச் செயலாளா் ஹாரிஸ் பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.