திருப்பூா் மாநகரில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இது குறித்து மாநகரக் காவல் ஆணையா் வே.வனிதா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: நல்லூா் காவல் ஆய்வாளா் சென்ன கேசவன், வடக்கு சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராகவும், வடக்கு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளா் கணேசன், மாநகர மதுவிலக்கு காவல் ஆய்வாளராகவும், தெற்கு காவல் நிலைய காவல் ஆய்வாளா் பிரகாஷ், அனுப்பா்பாளையம் காவல் நிலையத்துக்கும், அனுப்பா்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் ஆனந்த், வடக்கு குற்றப் பிரிவு காவல் ஆய்வாளராகவும், காவல் ஆய்வாளா் பிச்சையா, தெற்கு காவல்
ஆய்வாளராகவும், காவல் ஆய்வாளா் ரமேஷ், நல்லூா் காவல் நிலைய ஆய்வாளராகவும், காவல் ஆய்வாளா் கீதா வீரபாண்டி காவல் நிலைய ஆய்வாளராகவும் பணி அமா்த்தப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.