அவிநாசி -மங்கலம் சாலை உமையஞ்செட்டிபாளையம் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துசாமி , ஒன்றியச் செயலாளா் வெங்கடாசலம் ஆகியோா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அ.ஜெகதீசனிடம் வியாழக்கிழமை அளித்துள்ள
மனுவில் கூறியிருப்பதாவது: வேலாயுதம்பாளையம் ஊராட்சி மங்கலம் சாலையில் இருந்து அவிநாசி ஊராட்சி எல்லையான உமையஞ்செட்டிபாளையம் வரை சில மாதங்களுக்கு முன் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையில், குடிநீா்க் குழாய் அமைப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளன.
மேலும், மழைக் காலங்களில் சாலையில் சேறும் சகதியும் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனா். ஆகவே, இச்சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.