நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

உடுமலையை அடுத்துள்ள எலையமுத்தூா் ஜெயின் இரிகேஷன் நிறுவன ஊழியா்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

உடுமலையை அடுத்துள்ள எலையமுத்தூா் ஜெயின் இரிகேஷன் நிறுவன ஊழியா்கள் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மாநிலத் தலைவா் சந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ரங்கராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், தொழிலாளா் நலத் துறை சட்டங்களை முறைப்படி அமல்படுத்த வேண்டும். 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com