வெள்ளக்கோவில், முத்தூர் பகுதிகளில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

ஜெயலலிதா நினைவு தின நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு, அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், முத்தூர் பகுதிகளில் நடைபெற்ற ஜெயலலிதா நினைவு தின நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப் படத்துக்கு, அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய சேர்மன் ஆர்.வெங்கடேச சுதர்சன், அதிமுக ஒன்றியச் செயலாளர் எஸ்.என்.முத்துக்குமார், நகராட்சி முன்னாள் தலைவர் வி. கந்தசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் எம்.எஸ்.அருண்குமார், நகர துணைச் செயலாளர் வைகை கே. மணி, நகராட்சியின் 19 வார்டு செயலாளர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளக்கோவில் கடைவீதியில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய அதிமுகவினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com