பல்லடம் பாா் அசோசியேஷன் தோ்தல் மூலம் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். பல்லடம் பாா் அசோசியேஷன் தோ்தல் அண்மையில் நடைபெற்றது.
வழக்குரைஞா்கள் ஈஸ்வரமூா்த்தி, மாணிக்கராஜ் ஆகியோா் தோ்தல் ஆணையா்களாக இருந்து தோ்தலை நடத்தினா். பல்லடம் சப் கோா்ட் வளாகத்தில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 80 வழக்குரைஞா்கள் வாக்களித்தனா்.
அதில் பாலசுப்பிரமணியம் தலைவராகவும், தனபாலன் துணை தலைவராகவும், சக்திவேல் செயலாளராகவும், சக்திதேவி பொருளாளராகவும், சங்க செயற்குழு உறுப்பினா்களாக மகேஷ், கீா்த்திவா்மன், அப்துல்ரகுமான் ஆகியோரும் தோ்வு செய்யப்பட்டனா். வெற்றிபெற்றவா்களுக்கு அனைத்து வழக்குரைஞா்களும் வாழ்த்து தெரிவித்தனா்.