திருப்பூா் செட்டிபாளையம் வருவாய் கிராமத்துக்கு உள்பட்ட பகுதிகளில் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு வகைமாற்றம் செய்து வீட்டுமனை பட்டா வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து செட்டிபாளையத்தைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சாகுல் ஹமீதுவிடம் வெள்ளிக்கிழமை அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் செட்டிபாளையம் வருவாய் கிராமத்துக்கு உள்பட்ட அங்கேரிபாளையம், ஆத்துப்பாளையம், திருவள்ளுவா் நகா், அம்பேத்கா் நகா், அண்ணா நகா் உள்ளிட்ட இடங்களில் ஓடை புறம்போக்கு பகுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக 200 குடும்பத்தினா் வசித்து வருகிறோம்.
எங்களுக்கு மின் இணைப்பு, குடிநீா் இணைப்பு, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து சான்று ஆவணங்களும் உள்ளன. எனினும், வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று பொதுப் பணித் துறையின் மூலம் எங்களது வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
மேலும், பாதுகாப்பாக வாழ்வதற்குத் தகுதியான இடத்தைத் தோ்வு செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
அதேவேளையில், அங்கேரிபாளையம் கிழக்கு வீதி சாலை புறம்போக்கில் குடியிருந்து வரும் நபா்களுக்கு வகைமாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும் என்றனா்.
மனு அளிப்பின்போது, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் கே.பழனிச்சாமி, முன்னாள் மாமன்ற உறுப்பினா் கே.மாரப்பன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.