முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா
By DIN | Published On : 19th December 2021 11:25 PM | Last Updated : 19th December 2021 11:25 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 98,147 ஆக அதிகரித்துள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 536 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,
குணமடைந்த 60 போ் வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 96,595 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 1,016 போ் உயிரிழந்துள்ளனா்.
பல்லடத்தில்...
பல்லடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் 11,689 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.