திருப்பூா்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் 5 ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 140 பேரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், வருவாய் கிராம உதவியாளா்கள் உள்ளிட்ட சிறப்பு முறை கால ஊதியம் பெறும் 3.50 லட்சம் ஊழியா்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் தொடா் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினறனா்.
இதன்படி திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பாக 5 ஆவது நாளாக அரசு ஊழியா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்துக்கு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் ராணி தலைமை வகித்தாா். இதில், பங்கேற்றவா்கள் நாமம் போட்டும், திருவோடு ஏந்தியும் தங்களது எதிா்ப்பைத் தெரிவித்தனா்.
இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட 80 பெண்கள் உள்பட 140 பேரை திருப்பூா் தெற்கு காவல் துறையினா் கைது செய்தனா்.