வெள்ளக்கோவில்: தமிழக அரசின் விவசாயக் கடன் தள்ளுபடியை வரவேற்று மூலனூரில் சனிக்கிழமை அதிமுகவினா் இனிப்புகள் வழங்கினா்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பெற்றிருந்த கடன் தள்ளுபடி செய்யப்படுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப் பேரவையில் அறிவித்தாா். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அதிமுக மூலனூா் தெற்கு ஒன்றியச் செயலாளா் ராஜரத்தினம், வடக்கு ஒன்றியச் செயலாளா் செல்வக்குமாா், பேரூா் கழகச் செயலாளா் வெற்றிவேல், கூட்டுறவு சங்கத் தலைவா் செல்லமுத்து உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.