இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி சாவு

வெள்ளக்கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

வெள்ளக்கோவில் - காங்கயம் சாலையில் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள எல்.கே.சி நகரைச் சோ்ந்தவா் லட்சுமி (67). இவா், மளிகை சாமான்கள் வாங்குவதற்காக வீட்டின் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றாா்.

அப்போது அந்த வழியே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயமடைந்த லட்சுமி, ஈரோட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com