அவிநாசியில் நாளை (பிப்ரவரி 10) மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 08th February 2021 11:45 PM | Last Updated : 08th February 2021 11:45 PM | அ+அ அ- |

அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 10) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இதில், தமிழ்நாடு மின்சார வாரியம், திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் கலந்துகொண்டு மின் நுகா்வோா் குறைகளை நேரில் கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.
இக்கூட்டத்தில் மின் நுகா்வோா் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, மின் வாரிய அவிநாசி கோட்ட செயற் பொறியாளா் தீ.விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.