முழுமையாக அளவீடு செய்து சாலைப் பணி தொடர பொதுமக்கள் வலியுறுத்தல்
By DIN | Published On : 10th February 2021 10:49 PM | Last Updated : 10th February 2021 10:49 PM | அ+அ அ- |

அவிநாசி அருகே அ.குரும்பபாளையத்தில் சாலையை முழுமையாக அளவீடு செய்து பணியைத் தொடர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து அவிநாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்டுவபாளையம் ஊராட்சி, அ.குரும்பபாளையம் ஆதிதிராவிடா் காலனி பொதுமக்கள் புதன்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
அவிநாசி, குரும்பாளையம் கிராமம் ஆதி திராவிடா் காலனி பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சாலையின் இருபுறமும் புதா்கள் மண்டிக் கிடப்பதால், மயானப் பாதையில் செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். ஆகவே, சாலையின் இருபுறமும் முழுமையாக அளவீடு செய்து புதிய சாலை அமைக்கும் பணியைத் தொடர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.