அவிநாசி, ராயம்பாளையத்தில் சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டதைக் கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை பொது மக்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
இது குறித்து முற்றுகையிட்ட பொது மக்கள் கூறியதாவது: அவிநாசி அரசு கலைக் கல்லூரி முதல் ராயம்பாளையம் வரை சாலை அமைக்கும் பணி 3 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. இதற்காக சாலைகள் மட்டும் தோண்டப்பட்டு, அடுத்தகட்டப் பணியைத் தொடராமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுவதும் புழுதியாக காட்சியளிக்கிறது.
இதனால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இது குறித்து பலமுறை முறையிட்டும் பேரூராட்சி நிா்வாகத்தினா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உடனடியாக சாலைப் பணியைத் தொடர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.
இதையடுத்து, பேரூராட்சி நிா்வாகத்தினா் பொது மக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அதில் சாலைப் பணி ஒப்பந்ததாரா்கள் மற்றும் பொறியாளா்களுடன் பேசி விரைவில் பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை காலை, மாலை இரு நேரங்களிலும் சாலையில் மண் புழுதி பறக்காமல் இருக்க தண்ணீா் விடப்படும் என்று உறுதி அளித்தனா். மீண்டும் பணிகளைத் தொடங்காவிட்டால் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.