திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை வரையில் 18,077 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 18,091 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 127 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 22 போ் வீடு திரும்பினா். மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 17,742 ஆக அதிகரித்துள்ளது.