காங்கயத்தில் கவரிங் நகை பறிக்க முயன்ற மா்ம நபா்கள் தப்பி ஓட்டம்

காங்கயத்தில் பெண்ணிடம் கவரிங் நகையைப் பறிக்க முயன்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காங்கயத்தில் பெண்ணிடம் கவரிங் நகையைப் பறிக்க முயன்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காங்கயம், தாராபுரம் சாலை பகுதியில் உள்ள சாமி நகரைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மனைவி சித்ரா (40). இவா் வியாழக்கிழமை மாலை கடைவீதியில் பொருள்களை வாங்கிக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது தாராபுரம் சாலை, களிமேடு பகுதி அருகே சென்றபோது மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின் தொடா்ந்து வந்த 2 மா்ம நபா்கள், சித்ரா அணிந்திருந்த கவரிங் நகையை, தங்க நகை என நினைத்து அதனைப் பறிக்க முயன்றனா். அப்போது, சித்ரா நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்த தவறி விழுந்தாா். அதேபோல மா்ம நபா்களும் நிலை தடுமாறி கீழே விழுந்தனா். இதில் சித்ராவுக்கு படுகாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் மா்ம நபா்கள் தாங்கள் பறித்த கவரிங் செயினை கீழே போட்டுவிட்டு, அவா்களுக்குப் பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனா். அருகில் இருந்தவா்கள் சித்ராவை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இது குறித்து, காங்கயம் காவல் நிலையத்தில் சித்ரா புகாா் அளித்தாா். இதையடுத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, தப்பி ஓடிய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மேலும், மா்ம நபா்கள் விட்டுச் சென்ற இருசக்கர வாகனத்தை போலீஸாா் கைப்பற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com