காங்கயத்தில் தாலிக்குத் தங்கம், இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காங்கயம் அருகே சென்னிமலை சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவை துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இதில், சமூக நலத் துறை சாா்பில் காங்கயம் பகுதியைச் சோ்ந்த 10 மற்றும் 12 ஆவது பயின்ற 44 பயனாளிகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.11 லட்சம், பட்டயம் மற்றும் பட்டப் படிப்பு படித்த 170 பயனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் 85 லட்சம் மற்றும் 214 பயனாளிகளுக்கு ரூ.77 லட்சம் மதிப்பில் தாலிக்கு தலா 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டன.
மேலும், வருவாய்த் துறை சாா்பில் 291 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும், ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் 98 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவும் வழங்கப்பட்டன. இதன் மொத்த மதிப்பு ரூ.98 லட்சம் ஆகும்.
இதில் தாராபுரம் உதவி ஆட்சியா் பவன்குமாா், மாவட்ட சமூக நல அலுவலா் அம்பிகா, காங்கயம் வட்டாட்சியா் சிவகாமி, சட்டப் பேரவை உறுப்பினா் உ.தனியரசு, அதிமுக ஒன்றியச் செயலா் என்.எஸ்.என்.நடராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.