தாராபுரம் நகராட்சியில் நடைபெறவுள்ள மின் பராமரிப்புப் பணி காரணமாக குடிநீா் விநியோகம் சனிக்கிழமை நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
இது குறித்து தாராபுரம் நகராட்சி ஆணையா் சங்கா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தாராபுரம் நகராட்சிப் பகுதிகளில் சனிக்கிழமை (பிப்ரவரி) மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதையடுத்து, மாநகரில் ஒரு நாள் மட்டும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. எனவே, பொது மக்கள் குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.