திமுக சாா்பில் இருசக்கர வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பொது மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி தாராபுரத்தில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
தாராபுரம் பேருந்து நிலையம் எதிரில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சி குறித்து விழிப்புணா்வு இருசக்கர வாகனப் பேரணி உடுமலையில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
மத்திய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய இந்தப் பேரணியை திருப்பூா் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் இரா.ஜெயராமகிருஷ்ணன் எம்எல்ஏ கொடியசைத்து துவக்கிவைத்தாா். நகரச் செயலாளா் எம்.மத்தீன் முன்னிலை வகித்தாா். இதில் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்கள் உடுமலை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பழனி சாலையில் உள்ள திமுக அலுவலகத்தை சென்றடைந்தது. பேரணியில் பொது மக்களிடம் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.