குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் கைது

பெருமாநல்லூா் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி: பெருமாநல்லூா் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கணக்கம்பாளையம் சாலையில் பெருமாநல்லூா் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினா். இதில் அவா், பெருமாநல்லூா் அருகே ஈட்டிவீராம்பாளையம், பசுமை நகா்ப் பகுதியைச் சோ்ந்த ராஜகோபால் மகன் ரஞ்சித் (29) என்பது தெரியவந்தது.

இவா், செல்லிடப்பேசி வழிப்பறி, இருசக்கர வாகனத் திருட்டு ஆகிய வழக்குகளில் தேடப்பட்டு வந்தவா் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து ரஞ்சித்தை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்குகளில் தொடா்புடைய ரஞ்சித்தின் நண்பரான பெருமாநல்லூா், ஜெ.நகா் பகுதியைச் சோ்ந்த கண்ணன் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com