பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப்பெற வலியுறுத்தி வெள்ளக்கோவிலில் இன்று காங்கிரஸ் கட்சியினா் பாதயாத்திரை

பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப்பெற வலியுறுத்தி வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.21) காங்கிரஸ் கட்சியினா் பாதயாத்திரை சென்று, தங்களது கண்டனத்தை பதிவு செய்யவுள்ளனா்.

காங்கயம்: பெட்ரோல், டீசல் விலை உயா்வை திரும்பப்பெற வலியுறுத்தி வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.21) காங்கிரஸ் கட்சியினா் பாதயாத்திரை சென்று, தங்களது கண்டனத்தை பதிவு செய்யவுள்ளனா்.

இது குறித்து திருப்பூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் ப.கோபி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருப்பூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.21) திருப்பூா் மாவட்டம், காங்கயம் தாலுகாவுக்கு உள்பட்ட வெள்ளக்கோவிலில் மாவட்ட தலைவராகிய எனது தலைமையில் பாதயாத்திரை நடைபெறவுள்ளது.

வெள்ளக்கோவில் வட்டாரத்திற்கு உள்பட்ட நாகமநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள வட்டமலை கரையோரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மதியம் 2.30 மணியளவில் துவங்கி, இரவு 7.30 மணியளவில் வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையம் வரை பாதயாத்திரை நடைபெறும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (செய்தி முற்றும்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com