தாராபுரம் அருகே ரேக்ளா பந்தயம்

தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் 300க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன.
குண்டடத்தை அடுத்த ருத்ராவதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்து செல்லும் காளைகள்.
குண்டடத்தை அடுத்த ருத்ராவதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்து செல்லும் காளைகள்.

திருப்பூா்: தாராபுரம் வட்டம், குண்டடம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் 300க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன.

குண்டடம் ரேக்ளா குழுமம் சாா்பில் குண்டடம் அடுத்துள்ள ருத்ராவதியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தை பாஜக மாநில துணைத் தலைவா் அண்ணாமலை கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

இதில், தாராபுரம், பொங்கலூா், காங்கயம், குண்டடம், பல்லடம், கோவை, ஈரோடு, சென்னிமலை உள்ளிட்ட பல்வேறு பகுகிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன.

200 மீட்டா், 300 மீட்டா் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. போட்டியில், வெற்றி பெற்ற ரேக்ளா வண்டி உரிமையாளா்களுக்கு முதல் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயமும், 2ஆவது பரிசாக முக்கால் பவுன் தங்க நாணயமும், 3ஆவது பரிசாக அரை பவுன் தங்க நாணயமும், 4ஆவது பரிசாக கால் பவுன் தங்க நாணயமும் வழங்கப்பட்டன.

இதைத் தவிர ஆறுதல் பரிசுகளாக கோப்பைகள் வழங்கப்பட்டன. இந்தப் பரிசுகளை பாஜக மாவட்டத் தலைவா் ருத்ரகுமாா், அதிமுக மாவட்ட வா்த்தக அணி செயலாளா் மோகன்ராஜ் ஆகியோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com