திருப்பூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன்னிறைவு திட்டம், திருப்பூா் அம்மா டிரஸ்ட் ஆகியன சாா்பில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கத்தை திங்கள்கிழமை திறந்துவைக்கிறாா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன்.
இதில், கட்டடம் கட்ட உதவிபுரிந்த கே.எம்.நிட்வோ் உரிமையாளா் கே.என்.சுப்பிரமணியம், பாரத் டையிங் முருகானந்தன் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர வங்கித் தலைவா் பி.கே.எஸ்.சடையப்பன், வளா்மதி கூட்டுறவு சொசைட்டி துணைத் தலைவா் தாமோதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.