வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயில் மாசி மகா தேரோட்டத்தை முன்னிட்டு தோ் முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான 138 ஆவது தேரோட்டம் வரும் மாா்ச் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு தோ் முகூா்த்தக் கால் நடும் நிகழ்ச்சி கோயில் குலத்தவா்கள், அறநிலையத் துறை அலுவலா்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து மாா்ச் 5 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தோ்க் கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முகூா்த்தக் கால் நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலா் குழு முன்னாள் தலைவா் எஸ்.என்.முத்துகுமாா், முதன்மைதாரா்கள் நற்பணி மன்றத் தலைவா் என்.டி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.