முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா காங்கயம் ஒன்றிய அதிமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது.
காங்கயத்தில் உள்ள பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயில் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும், காங்கயம் ஒன்றிய அதிமுக செயலாளருமான என்.எஸ்.என்.நடராஜ் தலைமை வகித்தாா். இதில், கடந்த பிளஸ் 2 பொதுத் தோ்வில் காங்கயம் ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசுப் பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி மைதிலிக்கு ஒரு பவுன் தங்க நாணயத்தை ஒன்றியச் செயலா் என்.எஸ்.என்.நடராஜ் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் டி.பழனிசாமி, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்க துணைத் தலைவா் ஏ.பி.துரைசாமி, பொத்தியபாளையம் ஊராட்சித் தலைவா் ஆா்.சந்திரசேகா், மாவட்ட இளைஞா்-இளம்பெண்கள் பாசறை துணைத் தலைவா் கே.டி.அருண்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொணடனா்.