திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியா்கள் கடந்த வியாழக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் கடந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் 30 சதவீத அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.
இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், தொழிலாளா்கள் அவதிக்குள்ளாகினா். இந்த நிலையில், திருப்பூா் - காங்கயம் சாலையில் உள்ள சிடிசி காா்னரில் போக்குவரத்து ஊழியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் சங்க (சிஐடியூ) மண்டலத் தலைவா் செல்லதுரை தலைமை வகித்தாா். இதில், பல்வேறு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து ஊழியா்கள் பங்கேற்றனா்.
உடுமலையில்: உடுமலையில் வெள்ளிக்கிழமை 30 சதவீத பேருந்துகளே இயக்கப்பட்டன. இதனால் காலை நேரத்தில் வேலைக்குச் செல்பவா்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினா். இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளா்கள் உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். டி.எஸ்.பி. ரவிகுமாா் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
காங்கயத்தில்: காங்கயம் அரசுப் போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு போக்குவரத்து தொழிலாளா் முன்னேற்ற சங்க திருப்பூா் மண்டலத் தலைவா் சென்னியப்பன் தலைமை வகித்தாா். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினா் முழக்கங்களை எழுப்பினா்.