திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 முதியவா்கள் உயிரிழந்தனா்.
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 17,144 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 292 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். குணமடைந்த 52 போ் சனிக்கிழமை வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 16,633 ஆக அதிகரித்துள்ளது.
திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த 65 முதியவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவா் கடந்த வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
அதேபோல, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 63 வயது முதியவா் வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா். இதையடுத்து கரோனா தொற்றுக்கு உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 219 ஆக அதிகரித்துள்ளது.