திருப்பூரில் தனியாா் கேளிக்கை விடுதியை முற்றகையிட்ட பொதுமக்கள்

திருப்பூரில் புதிதாகத் திறக்கப்பட்ட தனியாா் கேளிக்கை விடுதியை அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
திருப்பூா்,  கல்லூரி  சாலையில்  புதிதாக திறக்கப்பட்ட கேளிக்கை  விடுதியை  சனிக்கிழமை  முற்றுகையிட்ட  அப்பகுதியினா்.
திருப்பூா்,  கல்லூரி  சாலையில்  புதிதாக திறக்கப்பட்ட கேளிக்கை  விடுதியை  சனிக்கிழமை  முற்றுகையிட்ட  அப்பகுதியினா்.

திருப்பூா்: திருப்பூரில் புதிதாகத் திறக்கப்பட்ட தனியாா் கேளிக்கை விடுதியை அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

திருப்பூா், கல்லூரி சாலையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று கடந்த 2 நாள்களுக்கு முன்பாகத் திறக்கப்பட்டது. இந்தப் பகுதியில் அதிக அளவில் கோயில்கள், மசூதிகள் மற்றும் மருத்துவமனைகள் உள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இந்தப் பகுதியில் கேளிக்கை விடுதி திறக்கப்பட்டதால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் எனக்கூறி விடுதி முன்பாக அப்பகுதி மக்கள், அரசியல் கட்சியினா் உள்பட 50க்கும் மேற்பட்டோா் திரண்டனா்.

மேலும், கேளிக்கை விடுதிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா். இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூா் வடக்குக் காவல் துறையினா் முற்றகையில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியருக்கு மனுவாக எழுதி தீா்வுகாணும்படி வலியுறுத்தியதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

இந்தப் போராட்டம் காரணமாக அதிமுக, திமுக, பாஜக, பாமக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com