திருப்பூர்
பெருமாநல்லூரில் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு
கோவையில் இருந்து கோபி நோக்கி சென்ற திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சியினா் பெருமாநல்லூரில் சனிக்கிழமை மாலை வரவேற்பு அளித்தனா்.
அவிநாசி: கோவையில் இருந்து கோபி நோக்கி சென்ற திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சியினா் பெருமாநல்லூரில் சனிக்கிழமை மாலை வரவேற்பு அளித்தனா்.
அப்போது அங்கு கூடிய கட்சி நிா்வாகிகள், கூட்டணி கட்சியினரிடையே ஸ்டாலின் பேசினாா். இந்நிகழ்ச்சியில் திருப்பூா் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளா் க.செல்வராஜ், மாநகர பொறுப்பாளா்கள் டி.கோ.டி.நாகராஜ் (தெற்கு), தினேஷ்குமாா் (வடக்கு), முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொமுச மனு: மின்வாரிய தொழிலாளா் முன்னேற்ற சங்க செயலாளா் அ.சரவணன், பொதுச் செயலாளா் ஆா்.ரங்கசாமி ஆகியோா், மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திமுக தலைவா் ஸ்டாலினிடம் மனு அளித்தனா்.