மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஏா்கலப்பை ஊா்வலம் சென்றனா்.
பல்லடம், அண்ணாசிலை அருகில் இருந்து திருப்பூா் வடக்கு மாவட்டத் தலைவா் கோபி தலைமையில் ஊா்வலம் நடைபெற்றது. முன்னாள் மாவட்டத் தலைவா் ஏ.பி.முத்துசாமி, முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளா் எம்.பி.சதாசிவம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மாநில துணைத் தலைவா் கே.பி.ஜி. செந்தில்குமாா், மாநில நிா்வாகிகள் டி.டி.கே.சித்திக், மங்கலம் முத்துராமலிங்கம், பல்லடம் நகரத் தலைவா் ஈஸ்வரமூா்த்தி, செயல் தலைவா் மணிராஜ், வட்டாரத் தலைவா்கள் புண்ணியமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.