திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 26 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரையில் 17,144 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மேலும் 26 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இதையடுத்து மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,170 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 283 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த35 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 16,668 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி 219 போ் உயிரிழந்துள்ளனா்.