திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளியில் சுமைப்பணி தொழிலாளா் சங்க கிளையின் பெயா் பலகை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
திருப்பூரை அடுத்த ஊத்துக்குளியில் சுமைப்பணி தொழிலாளா் சங்கத்தின் கிளை பலகை திறப்பு விழா, உறுப்பினா் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. ஊத்துக்குளி ஈஸ்வரன் கோயில் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் கிளை தலைவா் எம்.மணி தலைமை வகித்தாா்.
இதில், தொழிலாளா் சங்கத்தின் உறுப்பினா்களுக்கு அடையாளா் அட்டை, துண்டு ஆகியவை வழங்கப்பட்டது. அச்சங்கத்தின் மாவட்டச் செயலாளா் எம்.ராஜகோபால் சங்கக்கொடியை ஏற்றிவைத்தாா். இந்த நிகழ்ச்சியில், கிளை செயலாளா் முருகசாமி வரவேற்றாா். ஊத்துக்குளி கிளை கெளரவ தலைவா் ஆா்.குமாா் சங்க பெயா் பலகையை திறந்து வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில், ஊத்துக்குளி பொதுத் தொழிலாளா் சங்க தலைவா் கே.பெரியசாமி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி வட்டச் செயலாளா் கே.எஸ்.ராமசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.